புதிய குற்றவியல் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து பொள்ளாச்சியில் வழக்கறிஞர்கள் மறியல் போராட்டம்

பொள்ளாச்சியில் மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து வழக்கறிஞர்கள் அஞ்சல் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்தினர். மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி, சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.


Coimbatore: மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் வழக்கறிஞர்கள் பழைய வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையம் வழியாக பேரணியாக வந்தனர்.

பின்னர் உடுமலை சாலையில் உள்ள தலைமை அஞ்சல் துறை அலுவலகம் முன்பு மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். அப்போது திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



வழக்கறிஞர்கள் சங்க துணை தலைவர் உதயகுமார் கூறுகையில், "மத்திய அரசின் இந்த புதிய சட்ட திருத்த மசோதாவால் வழக்கறிஞர்கள் மட்டுமல்லாது பொது மக்களும் பாதிக்கப்படுவார்கள். பொதுமக்களை வழக்கறிஞர்களை அடக்கு முறையோடு கையாளும் இந்த புதிய சட்ட திருத்தம் காவல்துறை வருவாய்த் துறையோடு இணைந்து போராட்டங்களை ஒடுக்கும் வகையில் அமையும்" என்றார்.

மேலும் அவர், "பொதுமக்கள், வழக்கறிஞர்கள் நியாயங்களையும் நீதிமன்றங்களின் மாண்பையும் குறைக்கும் செயல் எனவே இந்த சட்டமன்ற திருத்த மசோதாவை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம். சமஸ்கிருதம், ஹிந்தியை திணிக்கின்ற இந்த முயற்சியை மத்திய அரசு கைவிடும் வரை போராட்டங்கள் வெடிக்கும்" என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...