கோவை ரயில் நிலையத்தில் விரைவில் ரயில் பெட்டி உணவகம்

கோவை ரயில் நிலையத்தில் விரைவில் ரயில் பெட்டி உணவகம் அமைக்கப்பட உள்ளது. லங்கா கார்னர் ரயில்வே பாலத்தின் அருகில் அமைக்கப்படும் இந்த உணவகம், பயணிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும்.


Coimbatore: கோவை ரயில் நிலையத்தில் விரைவில் ரயில் பெட்டி உணவகம் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெற்கு ரயில்வே சார்பில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏற்கனவே இது போன்ற உணவகம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பயன்படுத்தப்படாத ரயில் பெட்டியை உணவகமாக மாற்றி, பயணிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கோவை ரயில் நிலையத்தின் முகப்பில், லங்கா கார்னர் ரயில்வே பாலத்தின் அருகில் இந்த ரயில் பெட்டி உணவகம் அமைக்கப்பட உள்ளது.

இந்த நோக்கத்திற்காக, தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு சேவை செய்த ஒரு ரயில் பெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த ரயில் பெட்டியை உணவகமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரயில் பெட்டி உணவகத்திற்கான டெண்டர் பணி அடுத்த மாதம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய முயற்சி, ரயில் பயணிகளுக்கு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் ஒரு புதிய உணவு அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...