தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முதுநிலை நுழைவுத் தேர்வு ரத்து

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முதுநிலை நுழைவுத் தேர்வு சாஃப்ட்வேர் பிரச்சினை காரணமாக ரத்து செய்யப்பட்டது. 10 நாட்களுக்குள் புதிய தேதி அறிவிக்கப்படும் என துணைவேந்தர் தெரிவித்தார்.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் (TNAU) முதல் நிலை பட்ட மேற்படிப்பு நுழைவுத் தேர்வு, ஜூன் 23 அன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களால் இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டதாக பல்கலைக்கழகம் அறிவித்தது.

இந்த நுழைவுத் தேர்வு ரத்து குறித்து இன்று காலை 10 மணிக்கு முழுமையான தகவல் தெரிவிக்கப்படும் என பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமியிடம் விளக்கம் கேட்டபோது, அவர் பின்வருமாறு கூறினார்:

"சாஃப்ட்வேர் பிரச்சினை மற்றும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த 10 நாட்களுக்குள் நுழைவுத் தேர்வு நடைபெறும் புதிய தேதி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்ட பிறகு, தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும்."

மேலும், இளநிலைப் படிப்புகள் செப்டம்பர் மாதம் முடிவடையும் நிலையில், முதுநிலைப் படிப்புகளுக்கான வகுப்புகள் செப்டம்பர் இறுதியிலேயே தொடங்கும் என்றும் துணைவேந்தர் கூறினார். மாணவர் சேர்க்கையில் எந்தவித தாமதமும் ஏற்படாது என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்த திடீர் ரத்து அறிவிப்பு, தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், தொழில்நுட்பப் பிரச்சினைகளைச் சரி செய்து, விரைவில் தேர்வு நடத்தப்படும் என்ற நம்பிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...