கோவை ரேஸ்கோர்ஸில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கோவை ரேஸ்கோர்ஸில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பேரணியை தொடங்கி வைத்தார். செவிலியர்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ரதம் மற்றும் பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஜூலை 10 அன்று தொடங்கி வைத்தார்.



நிகழ்ச்சியின் தொடக்கத்தில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.



இந்த விழிப்புணர்வு பேரணியில் செவிலியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்தியாவின் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மொத்த கருவள விகிதம் 3.1 சதவீதத்திலிருந்து 2.1 சதவீதத்துக்கும் குறைவாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நாட்டின் குறிக்கோளான மக்கள் தொகையை நிலைப்படுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த ஆண்டின் உலக மக்கள் தொகை தினத்தின் கருப்பொருள் "ஒவ்வொரு தம்பதியரின் பெருமை குடும்பநலம், அதுவே வளர்ந்த இந்தியாவின் புதிய அடையாளம்" என்பதாகும். மேலும், தாய், சேய் நல்வாழ்வுக்கு சரியான வயதில் திருமணமும், போதிய பிறப்பு இடைவெளியும் சிறந்தது என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...