கோவை எவரெஸ்ட் இண்டஸ்ட்ரீஸ் மாநகராட்சிக்கு 75 கழிவறை கோப்பைகள் வழங்கல்

கோவை எவரெஸ்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், தெற்கு மண்டலத்தின் கழிவறைகளுக்காக 75 இந்திய வகை கழிவறை கோப்பைகளை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கியது. இந்த நன்கொடை ரூ.3.75 லட்சம் மதிப்புள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் எவரெஸ்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் மாநகராட்சிக்கு 75 இந்திய வகை கழிவறை கோப்பைகளை (Indian Class Set) வழங்கியது.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்களிடம் இந்த கழிவறை கோப்பைகளை எவரெஸ்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பொது மேலாளர் சுமிதா பத்மநாபன் நாயர் வழங்கினார். இந்த கழிவறை கோப்பைகள் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளின் கழிவறைகளில் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு கழிவறை கோப்பையின் மதிப்பு ரூ.5,000 ஆகும். மொத்தம் 75 கழிவறை கோப்பைகளின் மொத்த மதிப்பு ரூ.3.75 லட்சம் ஆகும்.

இந்த நிகழ்ச்சியில் எவரெஸ்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலை மேலாளர் கிரிதர் ரெட்டி, மேலாளர் நாகராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர். மாநகராட்சி தரப்பில் உதவி ஆணையர் (பொறுப்பு) இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ் ஆகியோரும் பங்கேற்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...