பெரியநாயக்கன்பாளையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

பெரியநாயக்கன்பாளையம் விவேகானந்தபுரம் சமுதாயக்கூடத்தில் ஜூலை 14 அன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. கண் புரை, குழந்தைகளின் கண் நோய்கள், கண் அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு கண் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.


Coimbatore: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் வரும் ஜூலை 14ஆம் தேதி நடைபெற உள்ளது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம், ஐ பவுண்டேஷன் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி ஆகியவை இணைந்து இந்த முகாமை ஏற்பாடு செய்துள்ளன.


பெரியநாயக்கன்பாளையம், கஸ்தூரிபாளையம் செல்லும் சாலையில் 5 Corner பகுதியில் உள்ள விவேகானந்தபுரம் சமுதாயக் கூடத்தில் இந்த முகாம் நடைபெறும். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் கண் புரை கண்டறிதல், குழந்தைகளுக்கான கண் நோய்கள், கண் நீர் அழுத்த நோய், தூரப்பார்வை, கிட்டப் பார்வை, வெள்ளெழுத்து போன்ற பல்வேறு கண் நோய்களுக்கு சிறந்த முறையில் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்க உள்ளனர்.


பெரியவர்கள், சிறியவர்கள் என கண் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் இந்த முகாமில் நிவாரணம் பெறலாம். கண்புரை பரிசோதனைக்கு பிறகு அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிறந்த முறையில் அறுவை சிகிச்சை செய்து தரப்படும். முகாமில் கலந்து கொள்ள வரும் பொழுது ஆதார் அட்டையின் நகல் எடுத்து வர வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...