கோவையில் 22-வது சர்வதேச வேளாண் கண்காட்சி தொடக்கம்: 450க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைப்பு

கோவை கொடிசியா வளாகத்தில் 22-வது சர்வதேச வேளாண் கண்காட்சி ஜூலை 11 முதல் 15 வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. 450க்கும் மேற்பட்ட அரங்குகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்றன.


கோவை: கோவை கொடிசியா தொழிற்கூட கண்காட்சி வளாகத்தில் 22-வது சர்வதேச வேளாண் கண்காட்சி இன்று (ஜூலை 11) தொடங்கியது. சர்வதேச அளவில் நடைபெறும் இந்த கண்காட்சி ஜூலை 15 வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.

வழக்கமாக 4 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி, இந்த ஆண்டு 5 நாட்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



இதில் 450க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, வேளாண் மற்றும் விவசாய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



இந்த கண்காட்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வேளாண் நிறுவனங்கள் மட்டுமல்லாமல், மலேசியா, சிங்கப்பூர், சைனா, தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன.



கண்காட்சியில் இந்தியாவைச் சேர்ந்த நாட்டு மாடுகளும், வெளிநாட்டு வகை ஆடுகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



மேலும், பல்வேறு விதைகள், இயற்கை குளிரூட்டிகள் ஆகியவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.



தோட்டக்கலை சார்பில் நர்சரிகளும் அமைக்கப்பட்டு, பல்வேறு ரக செடிகள், பூச்செடிகள் ஆகியவற்றின் விற்பனையும் நடைபெறுகிறது. இந்த கண்காட்சி விவசாயிகள், வேளாண் தொழில்முனைவோர் மற்றும் பொதுமக்களுக்கு பயனுள்ள தகவல்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...