தேர்தலில் வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்த நீலகிரி எம்.பி ஆ.ராசா

நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, கோவை வடக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.


Coimbatore: நீலகிரி மக்களவை உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆ.ராசா, தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு ஜூலை 11 அன்று நடைபெற்றது. கோவை வடக்கு மாவட்டத்தின் கூடலூர் நகராட்சி மற்றும் வீரபாண்டி பேரூராட்சி உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார் எம்.பி ஆ.ராசா.

சாந்திமேடு, செல்வபுரம், வட்டப்பாறை, திருமலைநாயக்கன்பாளையம், சாமிசெட்டிபாளையம், கணேசபுரம், கவுண்டம்பாளையம், புதுப்புதூர், பழையபுதூர், தெக்குப்பாளையம், நாயக்கனூர், வீரபாண்டி ஆகிய பகுதிகளின் வாக்காளர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.



இந்த நிகழ்வில் மாவட்ட கழகச் செயலாளர் தொ.அ.இரவி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி ஆர் சண்முகசுந்தரம், கூடலூர் நகர செயலாளர் அ.அறிவரசு, வீரபாண்டி பேரூர் கழகச் செயலாளர் வே.சுரேஷ் மற்றும் இந்தியா கூட்டணியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த ஆ.ராசா, தொடர்ந்து மக்கள் நலனுக்காக உழைப்பதாக உறுதியளித்தார். அவர் தனது உரையில், "நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற கடுமையாக உழைப்பேன். நமது பகுதியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்" என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...