கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை காந்தி பார்க்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீதான பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனங்களைக் கண்டித்து கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.


Coimbatore: கோவை காந்தி பார்க்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீதான பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனங்களைக் கண்டித்து கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

11.07.2024 வியாழக்கிழமை அன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் VMC. மனோகரன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் MN. கந்தசாமி, மாமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் அழகு ஜெயபாலன், மாநில பொதுச் செயலாளர்கள் பச்சைமுத்து, PS. சரவணக்குமார், மாநில செயலாளர் V. விஜயகுமார், மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் நவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



மாவட்ட துணைத் தலைவர் V. வெங்கிடபதி வரவேற்புரை நிகழ்த்தினார். சர்க்கிள் தலைவர் ஐ.எஸ். மணி நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சியில் சுல்தான்பேட்டை கோவிந்தராஜ், மாவட்ட நிர்வாகிகள் ஏ.ஜி. ஆறுச்சாமி, வி.எம். ரங்கசாமி, செல்வபுரம் ஆனந்த், OBC செயல் தலைவர் பழனிச்சாமி, மோகன்ராஜ், லலிதா மோகன்ராஜ், கணபதி அசோக் குமார், பேரூர் மயில், மாரியப்பன் துரை அருள் தாஸ், ராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு வட்டாரத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளைக் கண்டித்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீதான அவதூறு குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற வேண்டும் என்றும், அரசியல் நாகரிகத்துடன் செயல்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...