பொள்ளாச்சி அருகே விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன்

பொள்ளாச்சி அருகே கோவில்பாளையம் பகுதியில் இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த தந்தை மற்றும் இரு மகன்களை பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் காப்பாற்றினார். அவரது மனிதநேய செயல் பாராட்டப்பட்டுள்ளது.


Coimbatore: பொள்ளாச்சி அருகே கோவில்பாளையம் பகுதியில் நடந்த ஒரு சாலை விபத்தில் காயமடைந்த தந்தை மற்றும் அவரது இரு மகன்களை பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் காப்பாற்றிய சம்பவம் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

பொள்ளாச்சி தாமரைகுளத்தைச் சேர்ந்த கனகவேல் என்பவர் தனது இரு மகன்களான தரணீஸ் மற்றும் தரணீந்திரனுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். கோவில்பாளையம் அருகே அவர்களது வாகனம் எதிர்பாராத விதமாக சாலை தடுப்பில் மோதியதில் மூவரும் காயமடைந்தனர்.



சம்பவ இடத்தின் வழியாக கோவையிலிருந்து திரும்பி வந்த பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், விபத்தை கண்டதும் உடனடியாக தனது அரசு வாகனத்தில் காயமடைந்தவர்களை ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்களிடம் சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் சிகிச்சை தேவைப்பட்டதால், காயமடைந்தவர்களை கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பி வைத்தார்.

நகராட்சி தலைவரின் இந்த மனிதநேய செயல் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. அவசர காலங்களில் அதிகாரிகள் இது போன்ற மனிதநேய அணுகுமுறையை கடைப்பிடிப்பது அவசியம் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...