கோவை மேயர் மீதான ஊழல் குற்றச்சாட்டு தவறு - அமைச்சர் முத்துசாமி விளக்கம்

கோவையில் அமைச்சர் முத்துசாமி புதிய நுழைவாயிலை திறந்து வைத்தார். சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வைப்பு நிதி பத்திரங்களை வழங்கினார். பின்னர் பல்வேறு விவகாரங்கள் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நுழைவாயிலை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1048 பயனாளிகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி பத்திரத்தை வழங்கினார்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் முத்துசாமி, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2.49 கோடி மதிப்பில் 5 கட்டிடங்கள் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இரண்டு பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா 25 ஆயிரம் வைப்பு நிதி வைக்கும் திட்டத்தின் கீழ் 5.11 கோடி மதிப்பில் 1048 பயனாளர்களுக்கு பத்திரங்கள் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.



மக்களுடன் முதல்வன் திட்டத்தின் கீழ் இன்று முதல் 66 நாட்களுக்கு முகாம்கள் நடைபெற உள்ளதாகவும், கோவை மாவட்டத்தில் 218 கிராம பஞ்சாயத்துக்களில் இம்முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். 15 துறைகள் இதில் பங்கேற்கும் எனவும், 44 விதமான பிரச்சனைகளுக்கு மனு அளிக்கலாம் எனவும், 30 நாட்களுக்குள் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

அவிநாசி மேம்பால பணிகளும், சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளும் விரைவுப்படுத்தப்படும் என தெரிவித்தார். டெட்ரா பாட்டில் குறித்த கேள்விக்கு, நீதிமன்றத்தில் இது சம்பந்தமான வழக்கு இருப்பதாகவும், அதை எல்லாம் பார்த்த பின்பு தான் நடவடிக்கைகள் கொடுக்க வேண்டும் என பதிலளித்தார்.



கள்ளு கடை திறப்பது குறித்து, அது மிகப்பெரிய கொள்கை முடிவு எனவும், அது குறித்து பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட வேண்டி இருப்பதாகவும் தெரிவித்தார். கோவை மேயராக இருந்த கல்பனா உடல்நிலை சரியில்லை என்று தான் ராஜினாமா கடிதத்தை வழங்கி இருப்பதாகவும், அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு என்று கூறுவது சரியானது அல்ல என தெரிவித்தார்.

அரசு மதுபான கடைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்பொழுது 500 கடைகள் மூடப்பட்டு இருப்பதாகவும், அதனை தொடர்ந்து செய்வதற்கு சில இடையூறுகள் இருப்பதாகவும் தெரிவித்தார். அனுமதி இன்றி மதுக்கடைகளை நடத்தினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

டாஸ்மாக்கில் பில்லிங் சிஸ்டம் ஒழுங்காக நடைபெறும் என தெரிவித்தார். மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுவை விற்பனை செய்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பலரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சியில் சில இடங்களில் மாசு கலந்த குடிநீர் வருவதாக புகார்கள் வருவது குறித்து, அது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

விக்கிரவாண்டி தேர்தலை பொறுத்தவரை, பொதுமக்கள் திமுக பக்கமும் முதலமைச்சர் பக்கமும் முழுமையாக நிற்பதை நேரடியாக பார்க்க முடிவதாகவும், மாபெரும் வெற்றியை பொதுமக்கள் அளிப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...