கோவை சங்கனூர் பள்ளியில் 7 புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தார் அமைச்சர் முத்துசாமி

கோவை சங்கனூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.91 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 7 புதிய வகுப்பறைகளை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர், எம்.பி., மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், 32வது வார்டில் உள்ள சங்கனூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தொடக்கக்கல்வி நிதி திட்டத்தின் கீழ் ரூ.91 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 7 கூடுதல் வகுப்பறைகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் Kranthi Kumar Pati, கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கணபதி.ப.ராஜ்குமார், மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் டாக்டர் ச.செல்வசுரபி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், முன்னாள் தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் ரவி, மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, கல்விக்குழு தலைவர் மாலதி நாகராஜ், மாமன்ற உறுப்பினர் ரா.பார்த்திபன் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



மேலும், மாநகராட்சி செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா மற்றும் பல மாநகராட்சி அலுவலர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த புதிய வகுப்பறைகள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...