கோவையில் அண்ணாமலைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை உக்கடம் பகுதியில் காங்கிரஸ் கட்சி மனித உரிமை துறையினர் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இமயம் ரஹ்மத்துல்லா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


கோவை: தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை கண்டித்து கோவை உக்கடம் பகுதியில் காங்கிரஸ் கட்சி மனித உரிமை துறையினர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவதூறாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் பெரும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் அண்ணாமலையை கண்டித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில், காங்கிரஸ் கட்சி மனித உரிமை துறையினர் சார்பாக கோவை உக்கடம் வள்ளியம்மை பேக்கரி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.



தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சி மனித உரிமை துறையின் மாநில செயலாளர் இமயம் ரஹ்மத்துல்லா தலைமை தாங்கினார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் சங்கர், சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர்.

சிக்கந்தர், கோட்டை இஸ்மாயில், மீன் அபு, கனி, அப்துல் ரஹ்மான், விஷ்ணு, பைசல், காஜா, ஆயில் ரியாஸ், அனீபா, நாசர், ஆரிஸ், மைதீன், உசேன் மற்றும் மாவட்ட பகுதி வார்டு மகளிர் அணி, ஆட்டோ தொழிற் சங்கம் உறுப்பினர்கள் என பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...