தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்புகளுக்கான இணையவழி கலந்தாய்வு தொடக்கம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்புகளுக்கான இணையவழி கலந்தாய்வு ஜூலை 12 முதல் 14 வரை நடைபெறுகிறது. 2024-25 கல்வியாண்டுக்கு 2813 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.



கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று (ஜூலை 12) முதல் இணையவழி கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்த கலந்தாய்வு ஜூலை 14 மாலை 5 மணி வரை தொடரும்.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல் பட்டப் படிப்புகளுக்கு 2024-25 ஆம் கல்வியாண்டுக்கு மொத்தம் 2813 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கலந்தாய்வு தொடர்பான விரிவான தகவல், தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கலந்தாய்வின்போது விண்ணப்பதாரர்கள் எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பின்போது விண்ணப்பதாரர்களிடம் இருந்து கட்டணம் பெறப்படும். சேர்க்கை பெற்ற மாணவர்கள் மட்டும் சேர்க்கையை உறுதி செய்யும்போது இணையதளம் மூலம் ரூ.5,000 மட்டும் செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் தங்களுடைய தரவுகளை வைத்து உள்ளே நுழைந்து தங்களின் கல்லூரி, பாட விருப்பங்களை மாற்றிக்கொள்ளலாம். கடைசியாக உறுதி செய்யப்பட்ட விருப்பமே இட ஒதுக்கீட்டுக்கு பரிசீலிக்கப்படும்.

கலந்தாய்விற்கான வழிமுறைகளை http://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு 94886-35077, 94864-25076 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...