கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் மாகாளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே அப்புலுபாளையம் மாகாளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பத்து நாள் நிகழ்வில் பல்வேறு பூஜைகள் நடைபெற்று, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


Coimbatore: கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருகில் உள்ள அப்புலுபாளையம் அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த நிகழ்வு கடந்த பத்தாம் தேதி மங்கல இசையுடன் தொடங்கியது.

விழாவின் முதல் நாளில், ராஜ கணபதி கோயிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டது. அதைத் தொடர்ந்து புண்ணியாகவாசனம், வாஸ்து சாந்தி மற்றும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அடுத்த நாள் இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.



ஸ்ரீ மாகாளியம்மன் மற்றும் ஸ்ரீ பாலமுருகன் விக்கிரகங்களுக்கு நூதன பிம்ப சுத்தி திருமஞ்சனம், விமான கலச பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், மங்கள ஆரத்தி ஆகியவை நடைபெற்றன. மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும் நடத்தப்பட்டன.

கும்பாபிஷேக நாளன்று காலை 6 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்று, அதைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார பூஜை, அபிஷேக பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக குழுவைச் சேர்ந்த வி.ராஜேந்திரன், குணசேகரன், பாலாஜி, அருள்மணி, சேகரன், வீரபத்திரன், தேவராஜ், ஜெயலட்சுமி, தாமோதரசாமி நாயுடு மற்றும் விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...