உடுமலையில் சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை ருத்ரப்ப நகரில் சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பல்வேறு சடங்குகளுடன் கூடிய இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ருத்ரப்ப நகரில் அமைந்துள்ள ஸ்ரீசித்தி விநாயகர், விசாலாட்சி அம்மன், பஞ்சமுக லிங்கேஸ்வரர், ரேணுகாதேவி அம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இந்த விழா கடந்த 10ம் தேதி புனித தீர்த்தம் அழைத்து வருதல் மற்றும் முளைப்பாறி எடுத்தல் நிகழ்வுடன் துவங்கியது. இன்று காலை இரண்டாம் கால யாகம், மங்கள இசை, வேத பாராயணம், விக்னேஸ்வரா பூஜை, புண்யாக வசனம், வேதிகார்ச்னை, தத்கல் மூலமந்திர ஹோமங்கள், யார்ர தானம், கடம் புறப்பாடு ஆகிய சடங்குகள் நடைபெற்றன.



தஞ்சாவூர் தினேஷ் செல்வ முத்துக்குமார் சிவாச்சாரியர் தலைமையில் பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் இராஜ கோபுரம், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகள் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாரதனை நடத்தப்பட்டது.

கும்பாபிஷேகத்திற்குப் பின்னர், பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. அதன் பிறகு, ஸ்ரீசித்தி விநாயகர், ஸ்ரீவிசாலாட்சி அம்மன், ஸ்ரீ பஞ்சமுக லிங்கேஸ்வரர், ரேணுகா தேவி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த மகா கும்பாபிஷேக விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். பக்தர்களின் பேராதரவுடன் இந்த விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...