உடுமலையில் ஓபிஎஸ் அணி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார்

உடுமலையில் ஓபிஎஸ் அணி அதிமுக தொண்டர்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். ஓபிஎஸ்-ஐ அவமதித்து பேசியதாக குற்றச்சாட்டு.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஓபிஎஸ் அணி அதிமுக தொண்டர்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல் துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

உடுமலை டிஎஸ்பி அலுவலகத்தில் ஓபிஎஸ் அணி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை 'துரோகி' என்றும் 'பச்சை துரோகி' என்றும் அவரது புகழுக்கும் மரியாதைக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.



மேலும், ஓ.பன்னீர்செல்வத்தை அவமானப்படுத்தும் வகையில் தினமும் உள்நோக்கத்துடன் ஊடகங்கள் மூலம் தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாகவும், இதனால் அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழு தொண்டர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் மனு வழங்கும்போது தொகுதி செயலாளர் லட்சுமணன், அவைத் தலைவர் ராமச்சந்திரன், தெற்கு ஒன்றியம் அவைத்தலைவர் சிவன், உடுமலை மேற்கு ஒன்றிய செயலாளர் மணி, உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி, உடுமலை மேற்கு ஒன்றிய வர்த்தக செயலாளர் கண்ணன், உடுமலை வடக்கு ஒன்றிய பேரவை செயலாளர் அரி முருகன், கிளைச் செயலாளர்கள் பழனிச்சாமி, மாசிலாமணி, நாட்ராயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...