சிறு, நடுத்தர வணிகங்களை வலுப்படுத்த புதிய முயற்சியில் மைக்ரோசாப்ட் கிளவுட் தொழில்நுட்பம்

கோயமுத்தூரில் உள்ள சிறு, நடுத்தர வணிகங்களில் மாற்றத்தை ஏற்படுத்த மைக்ரோசாப்ட் இன்டியா, கிளவுட்(cloud) அடிப்படையாகக் கொண்டு தீர்வுகளை வழங்க உள்ளது. இந்திய தரவு மையங்களில் உதவியுடன் மைக்ரோசாப்ட் அசுர், ஆபிஸ் 365, சிஆர்எம் ஆன்லைன் மற்றும் பேரிடர் மீள் சேவை போன்றவைகளை பயன்படுத்தி மைக்ரோசாப்ட் கிளவுட் தொழில்நுட்பம் இயங்குவதை பற்றி கோவை நகரில் உள்ள இரண்டு வணிக நிறுவனங்களான பயோலைன் ஆய்வகம், மான்ட்ப்ளூ தொழிநுட்பம் விளக்கியுள்ளன.



இந்தியாவில் உள்ள சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் டிஜிட்டல் மையத்தை 50%க்கும் மேலாக பயன்படுத்தும் 8 மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. பயோலைன் பரிசோதனை மையமானது, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் கேரளா மாநிலங்களில் 25க்கும் மேற்பட்ட மையங்கள் இணைந்து செயல்படுகின்றன. இதுபோன்றே மான்ட்ப்ளூ தொழிநுட்பம் நிறுவனம் ஆபீஸ் 365 பயன்படுத்தி வணிகத்தை ஒருங்கிணைந்து, வணிகத்தை மேம்படுத்தியுள்ளது. இத்தகைய வசதியால், சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை பிரிவு 25% விற்பனையை அதிகரிக்கும்.

இது பற்றி மைக்ரோசாப்ட் இன்டியா எஸ்எம்பி வணிக தலைவர் மணிஷ் ஷர்மா கூறுகையில்; எங்களது கிளவுட் தொழில்நுட்பத்தை சிறு, நடுத்தர நிறுவனங்கள் பயன்படுத்துவதால், சர்வதேச வாய்ப்புகளை பெற்றுள்ளன. இந்த வணிகத்தை சக்தியுள்ளதாக மாற்றும் வகையில் சரியான தீர்வுகளை புதுமையாகவும், வளர்ச்சிக்கு உகந்தவையாகவும் மைக்ரோசாப்ட் அளிக்க கடமைப்பட்டுள்ளது. சிறு, நடுத்தர தொழில் வணிக அமைப்பானது, வணிக மாதிரிகளை உருவாக்குவதோடு மற்றும் தேவையான மாற்றங்களை குறைவான விலையில் அமைத்து தருகிறது. 

வாடிக்கையாளர்கள், வணிகத்தின் அளவை உயர்த்துவதோடு அதன் நோக்கத்தையும் நிறைவேற்ற உதவுகிறது. இந்தியாவில் சிறு வணிக நிறுவனங்கள் அதிக அளவில்  உள்ள நகரமாக கோயமுத்தூர் திகழ்கிறது. கிளவுட் தொழில்நுட்பத்தால் நோயாளிகளை நன்கு கவனிப்பதில் பயோலைன் ஆய்வகம் சிறப்பாக செயல்படுகிறது. மான்ட்ப்ளு தொழில்நுட்பம், வேலைத்திறனை முழுமையாக பயன்படுத்தி உற்பத்தியை அதிகரித்துள்ளது. என்றார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...