விளாங்குறிச்சி ரோடு ஏறுதளம் பிரச்சினை: முன்னாள் எம்எல்ஏ நா கார்த்திக்கிடம் மனு

கோவை விளாங்குறிச்சி ரோடு - அவிநாசி ரோடு சந்திப்பில் ஏறுதளம் அமைக்கும் பணியால் பொதுமக்கள் பாதிப்பு. இது தொடர்பாக முன்னாள் எம்எல்ஏ நா கார்த்திக்கிடம் மனு அளிக்கப்பட்டது.



Coimbatore: கோவை மாநகராட்சி வார்டு எண் 26க்குட்பட்ட விளாங்குறிச்சி ரோடு - அவிநாசி ரோடு சந்திப்பில் ஏறுதளம் அமைக்கும் பணி தொடர்பாக பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று கோவை மாநகர மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் நா கார்த்திக் முன்னாள் எம்எல்ஏவை அவரது அலுவலகத்தில் சந்தித்து இது தொடர்பான மனுவை அளித்தனர். இந்த சந்திப்பில் மறுமலர்ச்சி திமுக மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, மறுமலர்ச்சி திமுக மாநகர மாவட்ட துணை செயலாளர் பயணியர் தியாகு, பீளமேடு பகுதி கழக செயலாளர் எஸ் பி வெள்ளியங்கிரி, திராவிட முன்னேற்றக் கழக பீளமேடு பகுதி கழக செயலாளர் துரைசெந்தமிழ்ச்செல்வன், 26 வது வார்டு வட்டக் கழக செயலாளர் ஆ மாடசாமி, மாவட்ட பிரதிநிதி பூவே துரைசாமி, வட்டக் கழகப் பிரதிநிதி சதீஷ் கோகுல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது, விளாங்குறிச்சி ரோட்டில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று எம்எல்ஏவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

Hindu Munnani functionary arrested for slandering Prophet Muhammad in Coimbatore - Simplicity https://simplicity.in/coimbatore/english/news/77769/

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...