சூலூரில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்; பல்வேறு இடங்களில் ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி சூலூரில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தை துவக்கி வைத்தார். பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (ஜூலை 18) துவக்கி வைத்தார்.





தொடர்ந்து சூலூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கால்நடை மருத்துவமனை, கூட்டுறவு பண்டக சாலை உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.





பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுடன் பேசிய ஆட்சியர், அடிப்படை வசதிகள், மாணவர் சேர்க்கை, கற்றல் திறன் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.



மேலும் வகுப்புகளுக்கு நேரில் சென்று மாணவிகளைச் சந்தித்து பேசிய ஆட்சியர், ஸ்மார்ட் வகுப்பறையின் பயன்பாடு மற்றும் பாடத்திட்டங்கள் குறித்து உரையாடினார்.

கள ஆய்வின் இடையே ஆட்சியர் கிராந்தி குமார் பாடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "அரசு பள்ளிகள் CSR உதவியுடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக இணைய வசதி, உயர்தர ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன," என்றார்.

தென்மேற்கு பருவமழை குறித்து பேசிய ஆட்சியர், "கோவை மாவட்டத்தில் மழை சீராக பெய்து வருவதால் பல இடங்களில் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்து வருகிறது. வால்பாறை பகுதியில் மட்டும் தொடர் கனமழை, மண்சரிவு உள்ளிட்ட காரணங்களுக்காக அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு சூழல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பவானி ஆற்றில் அதிக அளவில் நீர் செல்வதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.

மேலும் அவர், "நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பொழுதுபோக்குக்காக நீர் நிலைகளில் குளிக்க செல்வது, அருகே சென்று செல்ஃபி எடுப்பது, விளையாடுவது உள்ளிட்ட செயல்களைத் தவிர்க்க வேண்டும். தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் போலீசார் மூலம் பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்தி வருகிறோம்," என்று கூறினார்.

Newsletter

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...