கோவை தடாகம் பகுதியில் இரண்டு சிறுத்தைகள் நடமாட்டம்: குடியிருப்பு வாசிகள் வீடியோ பதிவு

கோவை தடாகம் திருவள்ளுவர் நகர் பகுதியில் இரண்டு சிறுத்தைகள் நடமாடும் காட்சியை குடியிருப்பு வாசிகள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். வனத்துறையினர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பேரூர், தொண்டாமுத்தூர், நரசீபுரம், தடாகம் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தடாகம் திருவள்ளுவர் நகர் பகுதியில் இரண்டு சிறுத்தைகள் நடமாடும் காட்சியை அப்பகுதி குடியிருப்பு வாசிகள் செல்போனில் பதிவு செய்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் கருஞ்சிறுத்தை மற்றும் சிறுத்தை கோழி, ஆடு, மாடு போன்ற வளர்ப்பு விலங்குகளை வேட்டையாடி சென்றதாக தகவல் வெளியானது.



கடந்த வாரம் தொண்டாமுத்தூர் வண்டிக்காரன் புதூர் பகுதியில் வளர்ப்பு ஆடுகளை மர்ம விலங்கு வேட்டையாடி சென்றதாக தகவல் வெளியான நிலையில், வனத்துறையினர் நவீன கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர். ஆனால், அதில் எந்த காட்சியும் பதிவாகவில்லை.



தற்போது, தடாகம் திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இரண்டு சிறுத்தைகள் நடமாடும் காட்சியை குடியிருப்பு வாசிகள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வனத்துறையினர் சமீப காலமாக இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளை வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...