கோவை: திமுக முன்னாள் எம்.பி. வி.பி. சண்முகசுந்தரம் காலமானார்

கோவையில் திமுக முன்னாள் எம்.பி. வி.பி. சண்முகசுந்தரம் (75) உடல்நலக் குறைவால் காலமானார். முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். சண்முகசுந்தரம் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.


கோவை: கோவையில் திமுக முன்னாள் எம்.பி.யான வி.பி. சண்முகசுந்தரம் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (ஜூலை 20) காலை அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

வி.பி. சண்முகசுந்தரம் 1996 முதல் 1998 வரை கோபிசெட்டிப்பாளையம் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். அவர் திமுகவில் பல முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், சண்முகசுந்தரம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில், "திமுகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வி.பி. சண்முகசுந்தரம் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...