கோவை மேற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகள்: மண்டல தலைவர் தெய்வயானை ஆய்வு

கோவை மேற்கு மண்டலம் 35வது வார்டில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டிய இடங்களை மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை ஆய்வு செய்தார். சரஸ்வதி வீதி மற்றும் காந்திநகர் பகுதிகளில் நடைபெற்ற ஆய்வில் பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.


கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 35வது வார்டில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டிய இடங்களை மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை ஆய்வு செய்தார். இந்த ஆய்வு இன்று (20.07.2024) காலை நடைபெற்றது.

முதலில், சரஸ்வதி வீதியில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டிய இடத்தை மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை நேரில் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து, காந்திநகர் மூகாம்பிகை அம்மன் கோவில் வீதியிலும் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டிய பகுதிகளை ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது, அப்பகுதி மக்களிடம் அவர்களது குறைகளை கேட்டறிந்த மண்டல தலைவர், அவற்றை விரைவில் சரி செய்வதாக உறுதியளித்தார்.

இந்த ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர் சம்பத், சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...