கோவை ஆற்றுப்பாலம் இந்துக்கள் மயானத்தை சீரமைக்க வானதி சீனிவாசன் எம்எல்ஏ கோரிக்கை

கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன், ஆற்றுப்பாலம் இந்துக்கள் மயானத்தை சீரமைக்க கோவை மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆடி 18 வழிபாட்டிற்கு முன் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


Coimbatore: கோவை ஆற்றுப்பாலம் பகுதியில் உள்ள இந்துக்கள் மயானத்தை சீரமைத்து தரும்படி கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவை மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் சாலை ஆற்றுப்பாலம் பகுதியில் அமைந்துள்ள இந்துக்கள் மயானத்தில், வரும் ஆடி 18 (03.08.2024) அன்று காலம் காலமாக இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் வழிபாடு நடத்துவது வழக்கம். தற்போது இப்பகுதியில் உள்ள சமாதிகள் அனைத்தும் முட்புதர்களால் சூழப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வழிபாடு செய்வதில் சிரமம் ஏற்படும் என்று எம்எல்ஏ சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள முட்புதர்களை அகற்றுவதோடு, குடிநீர் வசதி, உப்பு தண்ணீர் வசதி மற்றும் தற்காலிக கழிப்பறை வசதி ஆகியவற்றை செய்து தரும்படி வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் வரும் ஆடி 18 அன்று மக்கள் எந்த இடையூறும் இன்றி தங்களது முன்னோர்களை நினைவு கூர்ந்து வழிபாடு செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி ஆணையர் இக்கோரிக்கையை ஏற்று, விரைவில் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...