மருதூர் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லத் திட்ட பயனாளிகள் தேர்வுக்கான சிறப்பு கிராம சபை கூட்டம்

கோவை மாவட்டம் மருதூர் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லத் திட்ட பயனாளிகளை தேர்வு செய்வதற்காக சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கலைஞரின் கனவு இல்லத் திட்ட பயனாளிகளை தேர்வு செய்வதற்காக சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என்று கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் அடிப்படையில், ஜூலை 22 அன்று மருதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பூர்ணிமா ரங்கராஜன் தலைமை வகித்தார்.

இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு பெற விரும்பும் தகுதியான நபர்கள் இந்த கூட்டத்தில் தங்களது மனுக்களை சமர்ப்பித்தனர்.

Newsletter

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...