மின் கட்டண உயர்வால் தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயரும் அபாயம்: எஸ்.பி. வேலுமணி எச்சரிக்கை

கோவையில் நடைபெற்ற அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், மின் கட்டண உயர்வால் தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயரும் அபாயம் உள்ளதாக தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி எச்சரித்துள்ளார்.



Coimbatore:

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள திருவள்ளுவர் திடலில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், நியாய விலைக் கடைகளில் பாமாயில், பருப்பு போன்ற பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. வேலுமணி, "அதிமுக ஆட்சியில் கொரோனா காலகட்டத்திலும், வருவாய் இழப்பு ஏற்பட்ட நிலையிலும் மின் கட்டணம், சொத்து வரி உயர்த்தப்படவில்லை. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் தொடர்ந்து மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது," என்று குற்றம்சாட்டினார்.

மேலும் அவர், "கோவை மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மின் கட்டண உயர்வால் வேறு மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

நியாய விலைக் கடைகள் குறித்தும் எஸ்.பி. வேலுமணி கருத்து தெரிவித்தார். "நியாய விலைக் கடைகளில் பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் தரமில்லாமல் குறைத்து வழங்கப்படுகின்றன. அனைத்து பொருட்களும் முழுமையாக வழங்கப்பட வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...