கோவையில் காட்டுப்பன்றி இறைச்சி விற்பனை முயற்சி: இருவருக்கு ரூ.60,000 அபராதம்

கோவை மாங்கரை அருகே வாகனம் மோதி இறந்த காட்டுப்பன்றியின் இறைச்சியை விற்க முயன்ற இரண்டு நபர்களுக்கு வனத்துறை ரூ.60,000 அபராதம் விதித்தது. 15 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.


Coimbatore: கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட மாங்கரை அருகே, ஆனைகட்டி - கோவை சாலையில் வாகனம் மோதி காட்டுப்பன்றி ஒன்று நேற்று (ஜூலை 24) உயிரிழந்தது.

இந்த சம்பவத்தைப் பார்த்த தடாகம் குட்டவெளியைச் சேர்ந்த மருதாசலம் மற்றும் ரங்கநாதன் ஆகியோர், இறந்த காட்டுப்பன்றியை எடுத்துச் சென்று அதனை வெட்டி கூறு போட்டனர். பின்னர் அந்த இறைச்சியை விற்பனை செய்ய முயன்றனர்.

இதனைக் கவனித்த அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை பணியாளர்கள், இவ்விருவரையும் பிடித்து கோவை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

வனத்துறை அதிகாரிகள் அவர்களிடமிருந்து 15 கிலோ காட்டுப்பன்றி இறைச்சியைப் பறிமுதல் செய்தனர். மேலும், சட்டவிரோதமாக வனவிலங்கு இறைச்சியை விற்க முயன்றதற்காக இருவருக்கும் தலா ரூ.30,000 வீதம் மொத்தம் ரூ.60,000 அபராதம் விதிக்கப்பட்டது.

வனவிலங்குகளை வேட்டையாடுவது, அவற்றின் இறைச்சியை விற்பனை செய்வது ஆகியவை இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...