கோவை புதூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகள் கொள்ளை

கோவை புதூர் காமாட்சி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. வீட்டு உரிமையாளர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் இந்த கொள்ளை நடந்துள்ளது.


Coimbatore: கோவை புதூர் காமாட்சி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை புதூர் காமாட்சி நகரை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி கீதா (72). கீதா கடந்த ஜூலை 22ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில், ஜூலை 24 மாலை கீதாவின் வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை வேலைக்காரப் பெண் முத்துலட்சுமி கண்டுபிடித்தார். உடனடியாக அவர் கீதாவுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் வீட்டை சோதித்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 14 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கீதா குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.

இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...