மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கோவையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கில் பங்கேற்பு

கோவையில் நடைபெற்ற 'மத்திய பிரதேசத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள்' கருத்தரங்கில் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் பங்கேற்று, தொழில்துறையினருக்கு முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விளக்கினார்.


Coimbatore: மத்திய பிரதேசம் மாநிலத்தில் தொழில் துவங்க அழைப்புவிடுக்கும் வகையில் அம்மாநிலத்தின் தொழில்துறை சார்பில் 'மத்திய பிரதேசத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள்' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் கோவை, நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மற்றும் அரசு துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தொழில்துறையினருக்கு வழங்கப்படும் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் மாணியங்கள் குறித்து எடுத்துரைத்ததோடு, மத்திய பிரதேசத்தில் தொழில் துவங்க வருமாறு அழைப்பும் விடுத்தனர்.



கருத்தரங்கில் தொழில் துறையினருக்கான வாய்ப்புகள், அவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள், அரசு உதவிகள் உள்ளிட்ட தொழில் துறையினரின் மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது. கோவை, திருப்பூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஜவுளி மற்றும் பின்னலாடை தொழில், இன்ஜினியரிங், ஆட்டோமொபைல்ஸ், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், தகவல் தொழில்நுட்பத்துறை பிரதிநிதிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

முதல்வர் மோகன் யாதவ் தனது சிறப்புரையில், "எல்லோருக்கும் வணக்கம்" என தமிழில் தொடங்கி, தமிழகத்திற்கும் மத்திய பிரதேசத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை சுட்டிக்காட்டினார். கோவை மற்றும் திருப்பூரின் ஜவுளித்துறை சிறப்பை பாராட்டிய அவர், மத்திய பிரதேசத்தின் பருத்தி உற்பத்தி மற்றும் ஜவுளித் தொழில் வளர்ச்சியை எடுத்துரைத்தார்.



PLI திட்டம் மற்றும் PM Mitra ஜவுளி பூங்கா ஆகியவற்றின் மூலம் மத்திய பிரதேசத்தின் ஜவுளித்துறை வளர்ச்சி அடைந்து வருவதாகவும், புதிய தொழில் விதிமுறைகள் மற்றும் மானியங்கள் மூலம் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ஆடை வடிவமைப்பு, ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆட்டோமொபைல், பொறியியல், இயந்திர உற்பத்தி ஆகிய துறைகளிலும் மத்திய பிரதேசம் முன்னேறி வருவதாக முதல்வர் கூறினார். மின்சார போக்குவரத்து மற்றும் மின் வாகன உற்பத்திக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 7, 8 தேதிகளில் கோபாலில் நடைபெறவுள்ள தொழில் மாநாட்டிற்கு அனைவரையும் பங்கேற்க அழைப்பு விடுத்த முதல்வர், மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையேயான தொழில் இணைப்பு தொடரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

செய்தியாளர்களை சந்தித்த போது, கோயம்புத்தூரின் தொழில் நிறுவனங்கள் மத்திய பிரதேசத்தின் தொழில் வளர்ச்சியில் பங்கு வகிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், தமிழ்நாட்டிலிருந்து எந்த தொழில் நிறுவனங்களையும் எடுத்துச் செல்லவில்லை என்றும், தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு மத்திய பிரதேசம் சிறந்த தளமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இரு மாநிலங்களின் தொழில் நிறுவனங்களை இணைக்கும் வகையில் தொழில் அலுவலகங்கள் திறக்கப்பட்டு தொழில் இணைப்பு உருவாக்கப்படும் என்றும் முதல்வர் மோகன் யாதவ் உறுதியளித்தார்.

Newsletter

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...