அரசு தேர்வுகளில் வெற்றி பெற மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் - கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அரசு போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற உதவும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அரசு போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் பொருட்டு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் ஏனைய அரசு தேர்வாணையங்களால் நடத்தப்படும் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி அடைவதற்கு இந்த பயிற்சி வகுப்புகள் உதவும் என்று அவர் கூறினார்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலமாக அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு போட்டித்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். முதற்கட்டமாக 100 மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு மற்றும் தங்கும் விடுதி வசதியுடன் கூடிய இந்த சிறப்பு பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 1, 2024 அன்று காலை 10.00 மணியளவில் சென்னையில் உள்ள சி.எஸ்.ஜ காது கேளாதோருக்கான மேல்நிலைப்பள்ளியில் தொடங்கவுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தை சார்ந்த விரும்பமுள்ள மாற்றுதிறனாளிகள் ஜூலை 29, 2024-க்குள் விண்ணப்பங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு மாற்றுத்திறனாளிகள் அரசு வேலைகளில் அதிக எண்ணிக்கையில் சேர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...