பவானிசாகர் அருகே சேற்றில் சிக்கிய யானை வனத்துறையினரால் மீட்பு


சத்தியமங்கலத்திற்கு உட்பட்ட பவானிசாகர் அணை மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப்பகுதியின் மத்தியில் அமைந்துள்ளது. 

இந்த வனப்பகுதிகள் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

கடந்த ஒருமாத காலமாக சரிவர மழை பெய்யாததால் பவானிசாகர் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் யானைகள் குட்டிகளுடன் கூட்டம், கூட்டமாக அணையின் நீர்த்தேக்கப்பகுதியை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளன.



இந்நிலையில், அன்னூர் அடுத்த பவானிசாகர் சித்தன்குட்டையில் நீர் அருந்த வந்த காட்டு யானை ஒன்று சேற்றில் சிக்கியது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அதனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.



இதனைத்தொடர்ந்து, பல மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு வனத்துறையினர் உதவியுடன் மீட்டெழுந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...