வழக்கறிஞர்களுக்கான நடத்தை விதிமுறைகளை கண்டித்து கோவையில் சட்ட ஆணையத்தின் பரிந்துரை நகலை எரித்து வழக்கறிஞர்கள் போராட்டம்

வழக்கறிஞர்களுக்கான நடத்தை விதி முறைகளில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சட்ட ஆணையம் வழக்கறிஞர்களுக்கான நடத்தை விதிமுறைகளில் மாற்றம் செய்து பரிந்துரை நகலை வழங்கியுள்ளது.

இந்த விதிமுறைகள் வழகறிஞர்களின் உரிமைகளை பறிப்பதாக அமைந்துள்ளதாகக் கூறி இன்று கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நீதிமன்ற பணிகள் முடக்கியுள்ளன.

இந்நிலையில், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக இன்று பிற்பகல் வழக்கறிஞர்கள் சட்ட ஆணையத்தின் நடத்தை விதிமுறைகளில் மாற்றம் செய்து பரிந்துரை செய்துள்ள நகலை தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளானது வழக்கறிஞர்கள் தொழில் செய்ய முடியாத படி அபராதம், சிறை தண்டனை போன்றவை கிடைக்கும் அளவிற்கு திருத்தங்கள் செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த திருத்தங்கள் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வழகறிஞர்கள் சார்பில் அடுத்த மாதம் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் தில்லியில் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...