நீலகிரியில் வீட்டின் கூரையை உடைந்து உள்ளே விழுந்த குட்டி யானை

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே வீட்டின் கூரையை உடைந்து குட்டி யானை வீட்டுக்குள் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கோழிபாலம் பகுதியில் வசித்துவருபவர் தவுபிக், இவரது மனைவி ஜெமீலா. அப்பகுதயில் சாலையோர மலைச் சரிவுக்குட்பட்டு வனப் பகுதியில் இத்தம்பதியினரின் வீடு உள்ளது.

இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணியளவில் இவர்கள் உறங்கிக்கொண்டிருக்கையில் திடீரென வீட்டின் கூரையை உடைத்து ஒரு யானைக் குட்டி உள்ளே விழுந்துள்ளது. இதனைக்கண்ட ஜெமீலா அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். 



இதனிடையே வீட்டுக்குள் விழுந்த குட்டி யானை, வீட்டை விட்டு வெளியேற முறச்சித்து அங்கும் இங்கும் ஓடியுள்ளது. இதில் ஜெமிலாவிற்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. 



இந்நிலையில், தனது குட்டியை தேடி வந்த தாய் யானை, மேலும் சில யானைகளுடன் வீட்டின் வெளியே நின்றது. யானைக் கூட்டத்தைப் பார்த்து பதற்றமடைந்த ஜெமீலா மற்றும் அவரது மாமனார், மாமியார் மற்றும் 3 குழந்தைகள் வீட்டில் இருந்து வெளியேறி அருகில் உள்ள வீடுகளில் தஞ்சமடைந்தனர்.



வெளியே நின்ற யானைக் கூட்டம், வீட்டின் சமையல் அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று தனது குட்டியை மீட்டது. தொடர்ந்து, அந்த யானைக் கூட்டம் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன.



இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் கணேசன் மற்றும் வன ஊழியர்கள் ஜெமீலாவின் வீட்டை ஆய்வு செய்தனர். பின், கூடலூர் மருத்துவமனையில் காயமடைந்த ஜெமீலா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...