கோவை கார் பந்தயத்தில் கேரள மருத்துவர் மாரடைப்பால் உயிரிழப்பு

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான ப்ளூ பேண்ட் கார் ரேலி சாம்பியன்ஷிப்பில் கேரள மருத்துவர் பிரேம்லால் மாரடைப்பால் உயிரிழந்தார். பந்தயத்தின் போது திடீர் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டார்.


Coimbatore: கோவை ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடத்தப்படும் தேசிய அளவிலான ப்ளூ பேண்ட் கார் ரேலி சாம்பியன்ஷிப்பின் மூன்றாவது சுற்றுப் போட்டிகள் கோவை எல் அண்டி பைபாஸ் சாலை அருகே ஜூலை 27 அன்று தொடங்கின. இப்போட்டியில் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பையனூர் அரசு மருத்துவமனையின் நரம்பியல் துறைத் தலைவர் மருத்துவர் பிரேம்லால் (46) பங்கேற்றார்.

போட்டியின் போது, மதியம் 1.30 மணியளவில் அரை மணி நேர சர்வீஸ் பிரேக் விடப்பட்டிருந்தபோது, காரில் இருந்து இறங்கி வரும் பிரேம்லாலுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் பரிசோதித்தபோது, பிரேம்லால் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

பிரேம்லால் செட்டிநாடு ஸ்போர்டிங் அணிக்காக மருத்துவர் ரிஷிகேஷுடன் இணைந்து பந்தயத்தில் பங்கேற்றார். கார் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த பிரேம்லால், பல முக்கிய கார் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார். அவரது மனைவி ஸ்மிஜா அரவிந்தும் மருத்துவர் ஆவார். இவர்களுக்கு விஷ்ணு மற்றும் அனிகா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த சம்பவம் பிரேம்லாலின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கார் பந்தயத்தில் பங்கேற்ற அனைவரிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேம்லாலின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து போட்டிகளைத் தொடக்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில், முதல் நாள் இரண்டு சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது.

Newsletter

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...