கோவை தொண்டாமுத்தூரில் யானையை விரட்டிய இளைஞர் உயிரிழப்பு

கோவை தொண்டாமுத்தூர் அருகே விராலியூரில் காட்டு யானையை விரட்டிய 24 வயது இளைஞர் யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். வனத்துறையினரின் எச்சரிக்கையை மீறி செயல்பட்டதால் இந்த சோகம் நேர்ந்தது.


Coimbatore: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்த விராலியூர் குடியிருப்பு பகுதிக்குள் ஜூலை 28 அன்று இரவு சுமார் 10 மணியளவில் காட்டுயானை ஒன்று நுழைந்தது. உடனடியாக பூலாம்பட்டி வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் காட்டு யானையை வனப்பகுதிக்கு விரட்ட முயன்றனர். யானை ஆக்ரோஷமாக சுற்றித் திரிந்ததால், அதன் அருகே செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்தனர்.

எனினும், விராலியூர் இந்திரா காலனியைச் சேர்ந்த கார்த்தி (24) மற்றும் அவரது நண்பர் ஹரிஷ் (22) ஆகியோர் யானையை விரட்ட முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த யானை அவர்களை நோக்கி திரும்பியது. ஹரிஷ் தப்பி ஓடிவிட்டார். ஆனால் கார்த்தி கீழே விழுந்ததால், யானை அவரைத் தூக்கி வீசி மிதித்தது. இதில் கார்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஹரிஷும் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வனத்துறையினரின் எச்சரிக்கையை மீறி யானையை விரட்டச் சென்றதால் நேர்ந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இன்று (ஜூலை 29) சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். அவர் தனது சொந்த நிதியாக ரூ.20,000 மற்றும் தமிழக அரசின் முதல் கட்ட நிதியாக ரூ.50,000 வழங்கினார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...