மனைவிக்கு உயர் சிகிச்சை கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன் கணவர் போராட்டம்

திருப்பூரில் விபத்தால் மூளை இரத்தக் கசிவு ஏற்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய தற்காலிக பணியாளருக்கு உயர் சிகிச்சை கோரி கணவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன் போராட்டம் நடத்தினார். அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் விபத்தால் மூளை இரத்தக் கசிவு ஏற்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய தற்காலிக பணியாளருக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பாதிக்கப்பட்ட மனைவியை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு கிடத்தி போராட்டத்தில் ஈடுபட்ட கணவரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த தேவம் பாளையம் பகுதியைச் சேர்ந்த சோழனின் மனைவி ஜோதிலட்சுமி, உடுமலை கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக பணியாளராகப் பணியாற்றி வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர், தனக்கு பணியிடமாறுதல் வேண்டும் என விண்ணப்பித்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக இவருக்கு பணியிடமாறுதல் வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் பணிக்குச் சென்ற ஜோதிலட்சுமிக்கு விபத்து ஏற்பட்டு மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜோதிலட்சுமி கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், உடனடியாக அவருக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், பணி நிரந்தரம் செய்து பணியிடமாறுதல் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து, தீவிர சிகிச்சையில் இருந்த மனைவி ஜோதிலட்சுமியை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு கிடத்தி கணவர் சோழன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து சோழன் தனது போராட்டத்தைக் கைவிட்டார். பின்னர், ஜோதிலட்சுமி உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Newsletter

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...