ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக்கல்லூரியில் ஆண்டு விழா

கோவை பச்சாபாளையத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக்கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கோவை வெர்டிகல் மனித வள மேம்பாட்டுத் தலைவர் எம்.செந்தில்குமார் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.



அப்பொது அவர் பேசுகையில், “வெளிநாட்டின் வெர்டிகல் நிறுவனத்தில் பணிபுரியும் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களை வெகுவாகப்பாராட்டினார். மேலும் இக்கல்லூரியின் பல மாணவர்களை வெர்டிகல் நிறுவனத்தில் பணிபுரிய அழைப்புவிடுத்தார். 

மாணவர்களாகிய நீங்கள், உங்கள் மனதிற்கு முழு திருப்தியளிக்கக் கூடிய துறையைத் தேர்ந்தெடுங்கள். மேலும் புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். படித்தலும் தெரிந்துகொள்ளுதலும் வாழ்நாள் முழுதும் அவசியம். பல்வேறு துறைகளில் திறன்களை வளர்த்துக்கொண்டு அறிவைப் புதுப்பித்தால் தான், உங்கள் துறையில் வெற்றி பெற முடியும்” என்றார்.

எஸ்என்ஆர் அறக்கட்டளையின் கல்வி இயக்குனர் முனைவர் எபிநேசர் ஜெயக்குமார் தலைமை உரையாற்றினார். உரையின் முடிவில், கல்லூரிப் படிப்பை 2017ல் நிறைவு செய்யும் மாணவர்களில் சிறந்தமாணவர் பி.ஷேர்ஐின் மற்றும் சிறந்த மாணவி கே.பப்புபிரித்தி ஆகியோருக்குத் தங்கப்பதக்கங்கள் வழங்கி கெளரவித்தார்.

இதனைத்தொடர்ந்து, கல்லூரி முதல்வர் பால்ராஜ், சென்ற ஆண்டில் நிகழ்ந்த சாதனைகள் மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்தார். தொடர்ந்து, சென்ற ஆண்டில் ஒவ்வொரு வகுப்பிலும் தகுதிப்பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவ மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...