கோவையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த இரு பெண்கள் கைது- தாயுடன் சிறை சென்ற குழந்தைகள் !

கோவையில் இரு வேறு இடங்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த 2 பெண்கள் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை ஒரு சிலர் தொழிலாகவே செய்து வருகின்றனர்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர்களிடம் இருந்து அவ்வப்போது சமூக அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பதும் வழக்கம்.

இந்நிலையில் கோவை ரயில் நிலையம் முன்பு ஒரு வயது குழந்தையை வைத்து பிச்சை எடுத்த சுகன்யா என்ற பெண்ணை கைது செய்த ரேஸ்கோர்ஸ் போலீசார் அவர்மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோல் ரத்தினபுரி, முத்துகுமரன் நகர் பள்ளிவாசல் அருகே மாதவி (9) மற்றும் தமிழரசி (2) ஆகிய இரு குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கவைத்த மாரியம்மாள் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறையினர் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைபட்ட சின்னஞ்சிறு குழந்தைகள்:-

முன்னதாக, கோவையில் குழந்தையை வைத்து பிச்சை எடுத்த சுகன்யா மற்றும் மாரியம்மாளின் குழந்தைகளுக்கு ஒன்று மற்றும் இரண்டு வயதே நிறைவடைந்துள்ளதால் தாயுடனேயே அக்குழந்தைகளும் சிறையில் அடைக்கப்பட்டனர். மாரியம்மாளின் மற்றுமொரு 9 வயது குழந்தை மட்டும் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...