கோவையில் தொடர் மழை: சுற்றுலா தலங்களுக்கு செல்ல வேண்டாம் - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி எச்சரிக்கை விடுத்துள்ளார். நிலச்சரிவு, வெள்ளம் போன்ற அபாயங்களை தவிர்க்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை.


கோவை: கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, சுற்றுலா தலங்களுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி எச்சரிக்கை விடுத்துள்ளார். மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் மழைநீர் அதிகரித்து வருவதால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல வேண்டாம் என ஜூலை 31 அன்று அறிவுறுத்தியுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வால்பாறை, ஆனைமலை, மேட்டுப்பாளையம், பேரூர் மற்றும் மதுக்கரை ஆகிய வட்டங்களை சுற்றியுள்ள சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார். குறிப்பாக, சின்னக்கல்லாறு, ஆழியாறு, சோலையாறு, கூலாங்கல்லாறு, அப்பர்நீரார், கீழ்நீரார், காடாம்பாறை, குரங்கு நீர்வீழ்ச்சி, கோவை குற்றாலம், பில்லூர், மற்றும் கீழ் பவானி ஆகிய இடங்களில் தொடர் கனமழை பெய்து வருவதால், நிலச்சரிவு மற்றும் நீரில் மூழ்குதல் போன்ற எதிர்பாராத அபாயங்கள் ஏற்படக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.

இந்த பருவமழை காலத்தில், மேற்கூறிய பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...