கற்பகம் செவிலியர் கல்லூரியில் தேசிய அளவிலான செவிலியர் தர குறியீடுகள் கருத்தரங்கு

கோவையில் உள்ள கற்பகம் செவிலியர் கல்லூரியில் ஆகஸ்ட் 1ஆம் தேதி "செவிலியர் தர குறியீடுகள்" குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. 17 கல்லூரிகளில் இருந்து 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Coimbatore: கோவையில் உள்ள கற்பகம் செவிலியர் கல்லூரி சார்பில் "செவிலியர் தர குறியீடுகள்" (Quality Indicators in Nursing) குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு ஆகஸ்ட் மாதம் முதல் தேதி நடைபெற்றது.



தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை அலுவலர் (DMChO) விஜயலட்சுமி, கற்பகம் கல்லூரியின் தலைவர் டாக்டர் ரா. வசந்த குமார், Chairman and Managing Trustee முருகய்யா, CEO வெங்கடேசன், Medical Director மற்றும் கற்பகம் செவிலியர் கல்லூரியின் முதல்வர் சுதா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் சுதா சிறப்பு கண்காணிப்பாளராக பங்கேற்றார்.



தொடர்ந்து, ஏழு சிறப்பு பேச்சாளர்கள் தங்கள் உரையை நிகழ்த்தினர். நிகழ்ச்சியின் இடையில் அறிவியல் சுவரொட்டி மற்றும் அறிவியல் காகித விளக்கக் காட்சியை சிறப்பு விருந்தினர்கள் மதிப்பீடு செய்தனர். மொத்தம் 17 கல்லூரிகளில் இருந்து 600க்கும் மேற்பட்டோர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியின் முடிவில், கலந்து கொண்டு சிறப்பித்த பேச்சாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. காலை 8.30 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்ச்சி மாலை 6.30 மணியளவில் தேசிய கீதத்துடன் நிறைவடைந்தது.

Newsletter

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...