தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம் தொடக்கம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 2 முதல் 8 வரை நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 573 தன்னார்வலர்கள் பங்கேற்கும் இந்த முகாமில் பல்வேறு கிராம மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


Coimbatore: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நாட்டு நல பணித்திட்டத்தின் சிறப்பு முகாம் ஆகஸ்ட் 2 முதல் 8 வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் இரண்டாம் ஆண்டு பயிலும் 573 தன்னார்வலர்கள் பங்கேற்கின்றனர்.

தென்கரை, போளுவாம்பட்டியில் ஆகஸ்ட் 2 அன்று காலை 10 மணியளவில் இந்த சிறப்பு முகாம் தொடங்கியது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி அவர்களின் வழிகாட்டுதலின் படி இந்த முகாம் நடைபெறுகிறது.



மாணவர் நல இயக்குநரகத்தின் முதன்மையர் முனைவர் நா. மரகதம் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். திட்டமிடல் மற்றும் கண்காணிப்புத்துறை முன்னாள் இயக்குநர், முனைவர் ஜே. வெங்கட பிரபு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தென்கரை பஞ்சாயத்து தலைவர் திருமதி மஹாலக்ஷ்மி, தென்கரை செயல் அலுவலர் திரு பழனியப்பன், மாதம்பட்டி பஞ்சாயத்து தலைவர் திரு முத்துராஜா, மாதம்பட்டி ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் திரு சி.கிருஷ்ணசாமி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



தென்கரை, செல்லப்பன் கவுண்டன்புதூர், சென்னனுர், மதிபாளையம், கரடிமடை, மற்றும் குப்பனுர் ஆகிய கிராமங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறும். விவசாயம், கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை, மற்றும் பிற துறைகளில் செயல் விளக்கங்கள் ஏற்பாடு செய்யப்படும். மேலும், தூய்மை இயக்கம், சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய முகாம்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கல்வித் திட்டங்கள் போன்றவைகளுக்கும் கவனம் செலுத்தப்படும்.

இந்த சிறப்பு முகாம் மாணவர் நலத்துறையின் முதன்மையர் முனைவர் நா.மரகதம் அவர்களின் வழிகாட்டுதலின்படி நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ம. பிரகதீஸ்வரன் மற்றும் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...