திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் தீபா சத்யன் தலைமையில், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நொச்சிபாளையம் பிரிவு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.



அப்போது கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து கடையில் இருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அமுல் குமார் (23) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.



விசாரணையில், பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும், அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் வட மாநில இளைஞர்கள் அதிகம் தங்கி வசிக்கும் ‘லைன் வீடு’ ஒன்றில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அங்கு சென்ற போலீசார் சோதனை நடத்தியதில் சுமார் 60 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தானேஸ்வரன் (27) என்பவரும் குட்கா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், குட்கா பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, மேலும் யாரெல்லாம் இதில் தொடர்புடையவர்கள் என்பதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...