ஆடி 18: பேரூர் படித்துறையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உணவு விநியோக நடவடிக்கைகள்

ஆடி 18ஐ முன்னிட்டு பேரூர் படித்துறையில் தன்னார்வலர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உணவு விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டு, படையல் பொருட்கள் ஏழைகளுக்கு வழங்கப்பட்டன.


Coimbatore: கோவை பேரூர் படித்துறையில் ஆடி 18ஐ முன்னிட்டு இன்று (03.08.2024) சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உணவு விநியோக நடவடிக்கைகள் நடைபெற்றன. இம்மண்ணில் வாழ்ந்து, நம்மை விட்டுச் சென்ற முன்னோர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஆற்றங்கரைகளில் படையலிட்டு வணங்கும் நாளான ஆடி 18ஐ முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பேரூர் படித்துறையில் ஒன்று கூடினர்.

இதன் காரணமாக அப்பகுதியில் அதிகளவில் பிளாஸ்டிக் குப்பைகள் காணப்பட்டன. இந்நிலையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுதல் மற்றும் உணவுப் பொருட்களை சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.



மக்கள் படையலாக விட்டுச் சென்ற சுமார் 2000 கிலோ அளவிலான ஆப்பிள், திராட்சை, கொய்யா, வாழைப்பழம், தேங்காய், இனிப்புகள், பலகாரங்கள் மற்றும் துணிகளை பிரித்து எடுத்து, ஏழை எளிய மக்களுக்கும், பசியால் வாடுவோருக்கும் No Food Waste அமைப்பின் உதவியுடன் விநியோகிக்கப்பட்டன.



இந்த அறப்பணியில் பேரூர் பேரூராட்சி மற்றும் அதன் ஊழியர்கள், நொய்யல் படித்துறை பாதுகாப்பு குழு, நொய்யலாறு அறக்கட்டளை ஆகியோருடன் Sri Krishna Adhithya College of Arts and Science, PSG College of Pharmacology, Hindhusdhan Arts and Science கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பான களப்பணியாற்றினர்.



இந்த முயற்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நலனுக்கு உதவும் வகையில் அமைந்தது. பொதுமக்களின் ஒத்துழைப்புடன், இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...