கோவையிலிருந்து வயநாட்டிற்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு கோவையிலிருந்து தமிழக வெற்றி கழகம் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன. இது முதல் கட்ட உதவியாகும்.


Coimbatore: கேரளாவில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக பல நூறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்புமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கோவை தெற்கு மாவட்டத் தலைவர் விக்கி மற்றும் இளைஞர் அணித் தலைவர் பாபு ஆகியோர் தலைமையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வயநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிவாரணப் பொருட்களில் உடைகள், காலணிகள், போர்வை, தலையணை, பக்கெட் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கும். முதல் கட்டமாக ஆகஸ்ட் 3 ஆம் தேதி காலை இப்பொருட்கள் கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து வயநாடு மக்களுக்குத் தேவையான பொருட்களை தமிழக வெற்றி கழகம் சார்பில் அனுப்பி வைக்கப்படும் என்று தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் ஏற்பட்ட பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும், பல தன்னார்வலர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடுகளை இழந்தவர்கள் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...