பொள்ளாச்சி வடுகபாளையம் ரயில்வே கேட் மீண்டும் திறப்பு: மக்கள் மகிழ்ச்சி

பொள்ளாச்சியில் மூடப்பட்ட வடுகபாளையம் ரயில்வே கேட் மீண்டும் திறக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி V.ஜெயராமனின் முயற்சியால் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.


கோவை: பொள்ளாச்சி வடுகபாளையம் பகுதியில் நூறாண்டுகளாக செயல்பட்டு வந்த ரயில்வே கேட் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே கேட் மூடப்பட்டதால் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.



இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி V.ஜெயராமன் அவர்களின் தொடர் முயற்சியால் இந்த ரயில்வே கேட் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் ரயில்வே துறை உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து, மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்கப்படும் வரை இந்த ரயில்வே கேட்டை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.



இதன் விளைவாக, ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரயில்வே நிர்வாகம் வடுகபாளையம் ரயில்வே கேட்டை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட்டது. இந்த நல்ல செய்தியை அறிந்த அப்பகுதி மக்கள் பொள்ளாச்சி V.ஜெயராமனுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து தங்களது நன்றியை தெரிவித்தனர்.

இந்த மகிழ்ச்சிகரமான தருணத்தை கொண்டாடும் விதமாக, பொள்ளாச்சி V.ஜெயராமன் அப்பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இந்த முடிவு அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கியுள்ளதோடு, அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்துள்ளது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...