உடுமலைப் பகுதியில் பூமி லட்சுமி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் லட்சார்ச்சனை: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறுஞ்சேரி ஊராட்சியில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு பூமி லட்சுமி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் இரண்டு நாள் லட்சார்ச்சனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறுஞ்சேரி ஊராட்சியில் உள்ள பூமி லட்சுமி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு இரண்டு நாள் லட்சார்ச்சனை நடைபெற்றது. மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும், அனைவரும் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ வேண்டியும் இந்த லட்சார்ச்சனை நடத்தப்பட்டது.

லட்சார்ச்சனையில் இருபதுக்கு மேற்பட்ட அர்ச்சகர்கள் பங்கேற்றனர். ரோஜா, துளசி, சம்பங்கி பூக்கள் மூலம் வேத மந்திரங்களுடன் லட்சார்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பூமி லட்சுமி ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.



முதல் நாள் லட்சார்ச்சனை, உபசாரம், சாற்றுமுறை நிறைவு பெற்ற பின் அம்மனுக்கு சிறப்பு மலர் அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

இதற்கிடையில் முக்கிய நிகழ்வாக வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் தேதி புதன்கிழமை ஸ்ரீ ரங்க மன்னார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...