பொள்ளாச்சியில் கலைஞர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

பொள்ளாச்சியில் காந்தி சிலை அருகில் திமுக நிர்வாகிகள் கலைஞர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரித்தனர். அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியிலும் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.


Coimbatore: பொள்ளாச்சியில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. காந்தி சிலை அருகில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் பல்வேறு திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னாள் ஒன்றிய அமைச்சரும், கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான மு. கண்ணப்பன், கழக மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் டாக்டர் மகேந்திரன், மாநில விவசாய அணி துணை தலைவர் தமிழ்மணி, கழக செயல்திட்ட குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகர மன்ற தலைவர் சியாமளா, வழக்கறிஞர் அணி தலைவர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



அதேபோல், அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியிலும் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இங்கு ஒன்றிய செயலாளர் யுவராஜ் தலைமையில் திரண்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கும், அவரது நினைவுச் சின்னமான பேனாவிற்கும் மரியாதை செலுத்தினர்.

தமிழகம் முழுவதும் திமுகவினர் கலைஞர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரித்து வருகின்றனர். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் அரசியல் பங்களிப்பையும், சமூக சேவையையும் நினைவு கூர்ந்து பல்வேறு இடங்களில் நினைவஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...