பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்

பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய குழு கூட்டம் 08.08.2024 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உறுப்பினர்கள் கிராமங்களின் வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.


Coimbatore: பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய குழு கூட்டம் 08.08.2024 அன்று ஒன்றிய குழு தலைவர் விஜய ராணி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுபா மற்றும் சதீஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஒரு மனதாக 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கலந்து கொண்ட உறுப்பினர்கள் கிராமங்களில் சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும், சாக்கடை கால்வாய்களை சீரமைக்க வேண்டும், ஊராட்சி ஒன்றிய பகுதியிலுள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி பழுதடைந்த கட்டடங்கள் மற்றும் சுற்றுச்சுவர்களை சீரமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.



மேலும், வேளாண் துறை, தோட்டக்கலை துறை, சுகாதாரத்துறை மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு அந்தந்த துறையில் உள்ள திட்டங்களை எடுத்துரைத்தனர். இந்தக் கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்களான மோகன் குமார், நாகமணி, தங்கமணி, பிரபு, நாகராஜன், அகிலாண்டேஸ்வரி, மாலினி, சிவக்குமார், மோகனாம்பாள் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...