கோவையில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 285 வழக்குகள் பதிவு

கோவை மாநகரில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 285 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், மேலும் தலைகவசம் அணியாத 2456 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கோவை மாநகர காவல்துறையின் சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாநகரில் விபத்து குறைப்பு தொடர் நடவடிக்கையாக ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் கோவை மாநகர காவல் துறை சார்பாக கடந்த வாரம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் கோவை மாநகர போக்குவரத்து மற்றும் சட்டம், ஒழுங்கு காவல்துறையினரால் தீவிர வாகனச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையின் போது குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் தலைகவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டிய வாகன ஓட்டுநர்கள் மீது கடந்த மூன்று நாட்களில் மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் மீது 285 வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டது.

மேலும், தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 2456 வழக்குகள் பதிவு செய்து அபராதத் தொகையாக ரூ.2 லட்சத்த 45 ஆயிரத்து 600 ரூபாய் வசூலிக்கப்பட்டு அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், இனிவரும் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் போக்குவரத்து விதிகளை முழுமையாக கடைபிடிக்கச் செய்து அவற்றை "விபத்தில்லா வார இறுதி நாட்களாக்க" நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடித்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோவை மாநகர காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...