உக்கடம் புதிய மேம்பாலம் திறப்பு: நிறைவடையாத பணிகளால் போக்குவரத்து நெரிசல்

கோவையில் உக்கடம் புதிய மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், நிறைவடையாத பணிகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இரண்டு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.



Coimbatore: கோவை உக்கடத்தில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. இருப்பினும், மேம்பாலப் பணிகள் சில இடங்களில் இன்னும் நிறைவடையாததால், உக்கடம் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கேரளா, பழனி, பொள்ளாச்சி, ராமநாதபுரம், செல்வபுரம், ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால் போன்ற பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் நீண்ட வரிசையில் சுமார் இரண்டு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



ரூ.481 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த மேம்பாலத்தில், கேரளா மற்றும் பொள்ளாச்சி வழியாக வரும் வாகனங்கள் ராமநாதபுரம் செல்ல வழி இல்லாததால், மேம்பாலத்தில் வரும் வாகன ஓட்டிகள் மீண்டும் உக்கடம் பேருந்து நிலையம் முன்பு இறங்க வேண்டியுள்ளது. இதனால், அனைத்து வாகனங்களும் உக்கடம் சந்திப்பில் குவிவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

போக்குவரத்து காவல்துறையினர் நெரிசலைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தாலும், தொடர்ந்து அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. முன்பு மேம்பாலம் இல்லாதபோது 30 நிமிடங்களில் கடக்கும் பாதையை, தற்போது இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகக் கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

திறப்பு விழாவின் போது, புதிய மேம்பாலத்தால் ஏழு நிமிடங்களில் சாலையைக் கடந்துவிடலாம் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போதைய நிலைமை வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...